சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது இன்று அதிகாலை 5.18 மணி அளவில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.6-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சிம்லா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன.