ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவில் கடந்த புத்தாண்டு தினத்தன்று முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் ஜகார்த்தாவிலும், அதன் அருகிலுள்ள லெபாக், பெகாசி நகரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் குழந்தைகள், பெண்கள் உள்பட 1.7 லட்சம் பேர் முகாம்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் வடிந்த ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மின் இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது.