ராமேஸ்வரம்: பாம்பன் விசைப்படகு மீனவர்கள் டன் கணக்கில் பேச்சாளை மீன்களுடன் நேற்று கரை திரும்பினர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இரவு முழுவதும் பிடித்ததில், அதிகளவில் பேச்சாளை மீன்கள் சிக்கின. டன் கணக்கில் பிடிபட்ட பேச்சாளை மீன்களுடன் அனைத்து படகுகளும் நேற்று காலை பாம்பன் கடற்கரைக்கு திரும்பின.