பாக்தாத்; ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத முகாம்கள் மீது கடந்த ஞாயிற்றுகிழமை அமெரிக்க விமானப்படை வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஈராக்கில் உள்ள ஈரான் சார்பு போராட்டக்காரர்கள் இதை கண்டித்து, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்்கி நேற்று முன்தினம் பேரணியாக சென்றனர். அப்போது, ‘அமெரிக்காவுக்கு மரணம்’, ‘அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும்’ என முழக்கமிட்டபடி சென்றனர். பாதுகாப்பு எல்லையை கடந்து சென்ற அவர்கள் அமெரிக்க தூதரகத்தை தாக்கி சூறையாடினர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்கள் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.