பிரிஸ்பேன் தொடரில் ஷரபோவா

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பிரிஸ்பேன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரில், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காயம் காரணமாக பல முக்கிய தொடர்களில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்த ஷரபோவா (32 வயது), தற்போது முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகி உள்ளார். புதிய சீசனின் 2வது தொடராக ஜனவரி 6ம் தேதி தொடங்க உள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் அவருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.

முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), கரோலினா பிளிஸ்கோவா, பெத்ரா குவித்தோவா (செக்.),ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), சமந்தா ஸ்டோசர், அஜ்லா டாம்ஜனோவிச் (ஆஸி.) ஆகியோருடன் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தியும் (ஆஸி.) இந்த தொடரில் பங்கேற்க உள்ளதால், ஷரபோவாவுக்கு சரியான சவால் காத்திருக்கிறது.

Related Stories: