திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த மலைப்பாதை வழியாக தமிழகம், கர்நாடகா மாநிலத்திற்கு பேருந்து மற்றும் கனரக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடல்மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் உள்ள திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக  கடும் பனிப்பொழிவு உள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் திம்பம் மலைப்பாதை மற்றும் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் மஞ்சள்நிற முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ரோட்டில் மெதுவாக சென்றனர். இதனால், 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள திம்பம் மலைப்பாதையை வழக்கமாக அரை மணி நேரத்தில் கடக்கும் வாகனங்கள் பனிமூட்டம் காரணமாக மலைப்பாதையை கடக்க 50 நிமிடம் ஆனது.

Related Stories: