பாக்தாத்: அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 25 பேர் பலியானதை கண்டித்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். ஈராக்கின் மேற்கு முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க படை வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், 25 பேர் கொல்லப்பட்டதற்கு ஈராக் அரசும், மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தில் ராணுவ உடை அணிந்த ஆண்களும், பெண்களும் நேற்று கண்டன பேரணி சென்றனர்.