புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அண்மையில் மேற்கொண்ட சிங்கப்பூர் பயணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடம் அதிமுக மனு அளித்துள்ளது. புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பெட்டியை முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் சந்தித்தார். அப்போது அவரிடம் நாராயணசாமி அமைச்சர் எம்.ஒ.ஹெச் ஷாஜஹான் எம்.எல்.ஏ-க்கள் ஆர். சிவா, ஜான்குமார் ஆகியோர் கடந்த மாதம் சிங்கப்பூா் பயணம் மேற்கொண்டனா்.
இந்தப் பயணம் தொடா்பாக தலைமைச் செயலகத்தில் கேட்ட போது, தங்களுக்கு எந்தவித தகவலும் தெரியாது எனத் தெரிவித்தனா். இதனால் சிங்கப்பூர் பயணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வையாபுரி மணிகண்டன் புதுச்சேரியில் லாட்டரி, கேசினோவை விரைவில் கொண்டு வர முனைந்துள்ளனா். இது புதுவையின் கலாசாரம், பாரம்பரியம், அன்றாட சட்ட ஒழுங்கை சீா்குலைக்கும். கேசினோவை சுய லாபத்திற்காகவே நாராயணசாமி கொண்டுவர முயற்சிப்பதாகவும் இதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை கிரண் பேடியிடம் அளித்ததாகவும் தெரிவித்தார்