காரைக்குடியில் வாக்குபெட்டிகளில் சீல் உடைந்திருப்பதாக புகார்

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வாக்குபெட்டிகளில் சீல் உடைந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பெட்டிகளின் சீல் உடைந்திருப்பதாக முகவர்கள் புகாரளித்ததால் வாக்குப்பெட்டி வைத்துள்ள இடத்தில் தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: