இஸ்தான்புல்: துருக்கி அரசு நடத்திய அதிரடி சோதனையில், ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல், கடந்த 8 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இதில் ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளும், குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் உள்நாட்டு போரில் களமிறங்கின. அமெரிக்காவின் ஆதரவுடன் குர்திஷ் போராளிகள் ஐஎஸ் தீவிரவாதிகளை விரட்டினர். இதனால் சமீபகாலமாக அங்கு போர் ஓய்ந்துள்ளது.