அண்ணாநகர்: கோயம்பேடு, ஜெய்நகர் பூங்கா பின்புறம் உள்ள தெருவில் வசிப்பவர் கவிதா (43). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மேல்மாடி அறையை உள்பக்கமாக பூட்டாமல் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பினான். காலையில் கண்விழித்து பார்த்த கவிதா, வீட்டில் பொருட்கள் திருடப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோல் அங்கு வசிக்கும் செல்வகுமார் என்பவரது வீட்டிலும் புகுந்து, பீரோவில் வைத்திருந்த ₹5 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.