பண்ருட்டி: பண்ருட்டி அருகே அக்கடவல்லி கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விவசாயமே முக்கியத்துவமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள ரயில்வே பாதையில் உள்ள தரைப்பாலம் வழியாகத்தான் செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த வழியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.