புதுச்சேரி: சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜராக கூலிங் கிளாஸ், ஷூ அணிந்து கூட்டாளிகளுடன் ஒய்யாரமாக நடந்து வந்தது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சோழன். இவர் மீது காலாப்பட்டு சந்திரசேகர் கொலை, முத்தியால்பேட்டை ரவுடி அன்பு ரஜினி கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட ரவுடி சோழன் தற்போது காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கொலை வழக்கு ஒன்றில், விசாரணைக்காக சிறையில் இருந்து சோழனை புதுச்சேரி நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர். சோழன், கூலிங் கிளாஸ் கண்ணாடி மற்றும் ஷூ அணிந்து கூட்டாளிகளுடன் ஸ்டைலாக நடந்து வந்துள்ளார்.