இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அவசர கடிதம் அனுப்பினார். தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடந்த 4ம் தேதி இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 24 பேரையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. தூதரக அதிகாரிகள் மீனவர்களை தங்களுடைய பராமரிப்பில் வைத்து அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
மீனவர்களுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாததால், தூதரக அதிகாரிகள் அனைத்து மீனவர்களுக்கும் அவசரகால சான்றிதழ் வழங்கி, விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கான விமான டிக்கெட்கள் ஏற்பாடுகளையும் செய்தது.
அதன்பிறகு நேற்று முன்தினம் இரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 24 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீனவர்களை தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் மீனவர்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
The post இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்: அரசு அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர் அனுப்பினர் appeared first on Dinakaran.