தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மேலும் தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது.சேலம், திருப்பத்தூரில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது; தருமபுரி, கரூர் பரமத்தியில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது; திருத்தணி, வேலூர், நாமக்கல்லில் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது; திருச்சி, மதுரை விமான நிலையம் தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: