ராமேஸ்வரம்: மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிமுனையில் விரட்டியதால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனையுடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் கடந்த 10 நாட்களாக தலைமன்னார் முதல் கச்சத்தீவு, நெடுந்தீவு கடல் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கப்பல்களில் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவு மீன்பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை வழிமறித்து மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியுள்ளனர்.