ஓசூர்: ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியில், உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ராஜாஜியின் நினைவு இல்லம் அருகில் வசித்து வரும் 110 வயதான மூதாட்டி எல்லம்மா, தள்ளாடும் வயதிலும் வாக்குச்சாவடிக்கு கைத்தடியை ஊன்றி நடந்து வந்து, தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.