ஓசூர் அருகே ஆர்வத்துடன் வாக்களித்த 110 வயது மூதாட்டி

ஓசூர்:   ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியில், உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ராஜாஜியின் நினைவு இல்லம் அருகில் வசித்து வரும் 110 வயதான மூதாட்டி எல்லம்மா, தள்ளாடும் வயதிலும் வாக்குச்சாவடிக்கு கைத்தடியை ஊன்றி நடந்து வந்து, தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

வாக்களிப்பதை சிலர் வீண் என்றும், நேரம் விரயம் என பேசுவோர் மத்தியில் 110 வயது மூதாட்டி வாக்களித்திருப்பது, மற்றவர்களுக்கான எடுத்துக்காட்டாக அமைந்தது. இவர் ராஜாஜியின் பிறந்த நாள் விழா மற்றும் நினைவு நாளின் போது, ராஜாஜி இல்லத்திற்கு செல்பவர்களிடம், ராஜாஜி பற்றிய பல நினைவுகளை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Related Stories: