வேலூர்: டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இச்சட்டம் தமிழகத்தில் 2011ல் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் ‘டெட்’’ தேர்வு எழுதி தேர்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது. அந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளதாக தெரிய வந்தது. இதையடுத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக போதிய வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. மேலும் அதற்கான பயிற்சியும் அரசு சார்பில் அளிக்கப்பட்டது.