காஷ்மீரின் பூஞ்ச் - ரஜோரி எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய பதிலடி தாக்குதலில் 4 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் - ரஜோரி எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய பதிலடி தாக்குதலில் 4 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக இந்திய ராணுவ நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் நடத்தி வந்த தாக்குதல்களுக்கு பாதுகாப்பு படையினர் தீவிர பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது. 

Related Stories: