ராய்ப்பூர்: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏழை மக்களின் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மூன்று நாட்கள் நடைபெறும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்திருவிழாவை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டுமே ஏழை மக்கள் மீது திணிக்கப்படும் வரிச்சுமை என்று கூறினார். மேலும் பேசிய அவர், ஏற்கனவே பணமதிப்பிழப்பு என்ற சுமை மக்கள் மீது திணிக்கப்பட்டது. அப்போது, தங்கள் வங்கி கணக்கில் பணம் இருந்தும் அதனை எடுக்க முடியாமல் மக்கள் சிரமம் அடைந்தனர்.