தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மேல்முறையீடு

இஸ்லாமாபாத் : தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மேல்முறையீடு செய்துள்ளார். மரண தண்டனையை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷாரப் முறையீடு செய்துள்ளார். பாகிஸ்தானில் 2007ம் ஆண்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது மூலம் அரசியல் சட்டத்தை மீறியதாக முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது. முஷாரப் மீதான தேசத் துரோக வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Related Stories: