குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அசாமில் தொடரும் மாணவர் அமைப்பு போராட்டங்கள்

கவுகாத்தி: அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர் அமைப்புக்கள் சார்பில் போராட்டம் தொடர்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அசாமில் அனைத்து மாணவர் சங்கம் மற்றும் ஏஜேஒய்சிபி சார்பாக நேற்று போராட்டம் நடந்தது. உடல்குரி மாவட்டத்தில் தங்லா என்ற இடத்தில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் பிரபல பாடகர்கள் சுபேன் கார்க், மானாஸ் ராபின் மற்றும் நடிகர் பபித்ரா ராபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஏஜேஒய்சிபி சார்பாக தின்சுகியாவில் அமைதி பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோலாகாட், லக்கிம்பூர், மோரிகான் மற்றும் சிவாசாகர் உள்ளிட்ட இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஏராளமானவர்கள் கலந்துக் கொண்ட போராட்டம் நடந்தது.

Related Stories: