திண்டிவனம் : திண்டிவனம் அருகே மாம்பாக்கத்தில் இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் நெல் வயலில் இறங்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை அருகே மாம்பாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு ஏரி பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளது. ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள சுடுகாட்டுக்கு செல்ல 40 வருடங்களாக சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது.