முட்புதரில் பச்சிளம் குழந்தை வீச்சு போலீசார் விசாரணை

செய்யாறு : செய்யாறு அருகே முட்புதரில் பச்சிளம் குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே முட்புதர் உள்ளது. நேற்று காலை 8.30 மணியளவில் முட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்போது, அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த சிலர் அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை என தெரிந்தது. இதையடுத்து அக்குழந்தையை மீட்டு  செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த செய்யாறு போலீசார், இந்த குழந்தையை வீசி சென்றவர்கள் யார், கள்ளக்காதலில் பிறந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: