காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்குள்ள அம்மனை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாகும். மேலும் இக்கோயிலில் அமாவாசை நாட்களில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் தை பொங்கல், காணும் பொங்கல், உள்ளிட்ட நாட்களில் இக்கோயிலில் சிறப்பு விழாக்கள் நடைபெறுகிறது. நேற்று காலை கோயில் பூசாரி வழக்கம் போல் பூஜை முடிந்து கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.