சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் செல்வராஜ் மரணம்

திண்டுக்கல்: நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகே தென்கலத்தை சேர்ந்தவர் டி.செல்வராஜ் (87). வழக்கறிஞராக ஐகோர்ட் மதுரை கிளையில் பணியாற்றினார். குடும்பத்துடன் திண்டுக்கல் பன்றிமலை சுவாமிகள் தெருவில் வசித்து வந்தார். இவர் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு வழக்குகளில் வாதாடி வென்றுள்ளார்.

மேலும் தோல், மலரும் சருகும், தேனீர், மூலதனம் உள்ளிட்ட நாவல்களையும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 70க்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார். திண்டுக்கல் மாவட்ட தோல் பதனிடும் தொழிற்சாலை தொழிலாளர் நிலை குறித்து இவர் எழுதிய, ‘தோல்’ நாவல், 2012ல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. உடல் நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ், நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: