திருமலை: தெலங்கானாவில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட டிஷா கொலைக் குற்றவாளிகள் 4 பேரின் சடலத்தையும் மறுபிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தெலங்கானா மாநிலம், சம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் டிஷா. இவரை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக எரித்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர், போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டர் குறித்து விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை நியமித்துள்ளது. இந்த குழு, 4 பேரின் சடலங்களை மறுபிரேத பரிசோதனை செய்வதற்கான வாய்ப்பு உள்ளதால், நீதிமன்றம் உத்தரவிடும் வரை அவற்றை பதப்படுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி, ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் 4 பேரின் சடலங்களும் வைக்கப்பட்டு உள்ளன.