அமமுக நிர்வாகிகளுக்கு அதிமுகவினர் மிரட்டல் டி.டி.வி.தினகரன் பேட்டி

மதுரை: மதுரையில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதிலும் அமமுக நிர்வாகிகளுக்கு அதிமுக தரப்பில் இருந்து பல்வேறு மிரட்டல்கள் வருகிறது. எந்த எதிர்ப்பு வந்தாலும் துணிச்சலோடு எதிர்கொள்வோம்.  அமமுகவில் பதவியில் இல்லாதவர்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர். அடுத்த தேர்தலில் பொது சின்னம் நிச்சயம் கேட்டு பெறுவோம். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்து, இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Related Stories: