கோவை: இந்தியா - மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் (22ம் தேதி) நடக்கவுள்ளது. இதில் இந்திய அணியில் உள்ள இளம் வீரர் தீபக் சாஹர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இந்தியாவில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்கள் முடிந்துள்ளது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் ஒருநாள் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (22ம் தேதி) கட்டாக்கில் நடக்க உள்ளது.