திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே தோப்பூர் கடற்கரையில் மயங்கி நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது. திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூர் கடற்கரையில் சுமார் 7 அடி நீளமும், சுமார் 200 கிலோ எடை கொண்ட சிறியவகை திமிங்கலம் மயங்கி நிலையில் நேற்று மாலையில் கரை ஒதுங்கியது. இதன் வாய் பகுதியில் காயம் காணப்படுகிறது. இந்த திமிங்கலம் எந்த வகையை சேர்ந்தது என்பது தெரியவில்லை. கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை மன்னார் வளைகுடா கடல்பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினங்கிகளில் உள்ள திமிங்கலமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.