பழநி: பழநி அருகே அதிமுக வேட்பாளர் வைத்த விருந்தில் கலந்து கொண்டவர்களை குளவிகள் விரட்டி விரட்டி கொட்டின. திண்டுக்கல் மாவட்டம், பழநி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, அமரபூண்டி ஊராட்சி தலைவர் பதவி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு கடைசி நாளான நேற்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் அதிமுகவை சேர்ந்த சிலர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, தங்களது தோட்டங்களில் உடன் வந்தவர்களுக்கு ‘கமகம கறி விருந்து’ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது தோட்டத்தில் உள்ள குளவிகள் கலைந்து விருந்தில் கலந்து கொண்டவர்களை விரட்டி விரட்டி கொட்டியது.