இளையான்குடி: சாலைக்கிராமத்தில் புதரின் நடுவே போலீஸ் குடியிருப்பு உள்ளது. அங்கு தேங்கும் கழிவு நீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சாலைக்கிராமம் போலீஸ் ஸ்டேசன் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 25 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பணியில் சாலைக்கிராமம் போலீசார் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தங்களது குடும்பங்களுடன் வசிப்பதற்காக கடந்த 2000ம் ஆண்டு போலீஸ் குடியிருப்பு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கட்டப்பட்டது. தற்போது ஏ, பி, சி எனும் இந்த குடியிருப்பில் போலீசாரின் குடும்பங்கள் தங்கியுள்ளனர். இந்த குடியிருப்புகளை சுற்றி செடி, கொடிகள் புதர்மண்டியுள்ளது.