வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டுக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணை கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. அதிபர் டிரம்ப், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது, காங்கிரஸ் அவையை அவமதித்தது உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு இரு அவையிலும் விவாதித்து கண்டன தீர்மானம் நிறைவேற்ற நாடாளுமன்ற விசாரணைக்குழுவில் ( ஹவுஸ் ஜுடிசரி கமிட்டி)உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் முறையே 23 மற்றும் 17 வாக்குகள் பதிவிட்டு ஆதரவாக வாக்களித்தனர்.