பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்துள்ள சுள்ளிப்பாளையத்தில், தனியாருக்கு சொந்தமான கிரானைட் கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் பாறைகளுக்கு வெடி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடி பொருட்களை அனுமதியின்றி பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பரமத்திவேலூர் போலீசார், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.