சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநகராட்சி பணிகளில் ஆற்று மணலுக்கு பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்தி ஊழல் செய்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் மீது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மாநகராட்சி பணிகளில் உலகவங்கி நிதியுதவியோடு நடைபெறும் திட்டங்களில் ஆற்று மணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு செய்யப்படுவதை குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ஆனால் ஆய்வில் ஆற்று மணலுக்கு பதில் எம்.சாண்ட் பயன்படுத்தி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.