சென்னை: மும்பையை சேர்ந்த திலகா என்பவர் கடந்த மாதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், சென்னை புழல் அருகே உள்ள எனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள 2,400 சதுரடி காலி நிலத்தை, எனது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை போலியாக தயாரித்து சிலர் அபகரித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.