நாகை: 33 ஆண்டுகளுக்கு முன் நாகை வந்த கணவர் மாயமானதால் அவரை கண்டுப்பிடித்து தரக்கோரி நாகை கலெக்டரிடம் இலங்கை பெண் மனு அளித்தார். இலங்கை திரிகோணமலை பாலையூத்தை சேர்ந்தவர் வசந்தி (57). இவர், நாகை கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த முகமதுயூசுப் (60). திரிகோணமலையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1979ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் கடந்த 1986ம் ஆண்டு, நாகூரில் வசிக்கும் தனது உறவினர்களை சென்று சந்தித்து விட்டு வருவதாக முகமதுயூசுப் தமிழகம் வந்தார். அதன் பின்னர் அவர் என்னிடம் பேசவில்லை. இதையடுத்து நான் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.