எடப்பாடி பேட்டிஉச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தல்

கோவை: கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:திமுகவின் கருத்துக்களை எல்லாம் கேட்டுதான் 27 மாவட்டங்களில் தேர்தலை நடத்திக்கொள்ளலாம். மீதமுள்ள 9 மாவட்டத்திற்கு முறையாக வார்டு மறுவரையறை செய்து அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நான்கு மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.  அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் இப்பொழுது தேர்தலை அறிவித்து உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories: