சென்னை: சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் குடும்ப பிரச்னையில், தேவையில்லாமல் என் மீது அவதூறு பரப்பப்படுகிறது, நடனக்கலைஞரும் நடிகையுமான ஜெயஸ்ரீ எனக்கு தங்கை போன்றவர் என்று நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில் நேற்று கூறினார். சென்னை, அடையாறு எல்.பி. சாலையில் உள்ள தி.எம்ப்ரஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடனக்கலைஞரும், நடிகையுமான ஜெயஸ்ரீ (32). இவருக்கும் அவரது கணவரான சின்னத்திரை நடிகர் ஈஸ்வருக்கும் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஈஸ்வர் மீது அவரது மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஈஸ்வரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தவுடன் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும், ஜெயஸ்ரீ க்கும் தொடர்பு உள்ளதாக பேட்டி அளித்தார். இச்சம்பவம் சினிமாத்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.