புதுடெல்லி: தெலங்கானா மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என்று விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் டிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரையும் நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இதை, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி ஆகியோர் பாராட்டினர். மேலும், பாவ் நகர் மாவட்டம், மகுவா நகரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்பா கோஹில், ஐதராபாத்தில் என்கவுன்டர் நடத்திய போலீசாருக்கு ₹1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக அதிரடியாக அறிவித்தார். இதில் என்கவுன்டர் செய்த போலீசாருக்கு நாட்டின் அனைத்து மாநில மக்களின் சார்பாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.