வாஷிங்டன்: கூடங்குளம் அணு உலை இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கவலை தெரிவித்துள்ளது. அணு உலை இணையதள முடக்கம் தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று அமெரிக்க கூறியுள்ளது. அணு உலை இணையதள பக்கம் முடக்கப்பட்ட பிரச்சனையை இந்தியா சர்வதேச அளவில் எழுப்பிருக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.