புதுடெல்லி: ‘பாஜ அரசு, விற்பதில்தான் திறமை வாய்ந்தது’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். சிஏஜி எனப்படும் தலைமை கணக்கு தணிக்கை அமைப்பு, நேற்று முன்தினம் ரயில்வே தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ‘2017-2018ம் ஆண்டில் ரயில்வேயின் இயக்க விகிதம் 98.44 சதவீதமாகும். இது, 100 ரூபாய் வருமானம் ஈட்டுவதற்கு 98.44 சதவீதம் செலவாகுகிறது என்பதை குறிப்பிடுகிறது. ரயில்வே இயக்க விகிதம் அதிகரிப்பது ஆரோக்கியமான விஷயம் இல்லை. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் மோசமான நிலை,’ என கூறப்பட்டுள்ளது.