அண்ணாநகர்: விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி முனியம்மாள் (26). இவர், நேற்று அதிகாலை கோயம்பேடு பேருந்து நிலைய முதல் நடைபாதையில் அமர்ந்து தனது கணவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பிரியா (24) என்பவர், முனியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திடீரென முனியம்மாளின் கழுத்தை அறுத்தார்.