புனே: ‘‘தீவிரவாதத்தின் மூலம் நடத்தும் மறைமுக போரில் கூட, பாகிஸ்தான் தனது வழக்கமான தோல்வியையே தழுவும்,’’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகடமியில் நேற்று நடந்த ராணுவ வீரர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவுக்கு எதிராக வழக்கமான போராக இருந்தாலும், குறுகிய போராக இருந்தாலும் சரி, அதில் வெல்லவே முடியாது என்பதை கடந்த 1965, 1971, 1999ல் நடந்த போர்களின் மூலமாக பாகிஸ்தான் உணர்ந்துள்ளது. அதனால், தீவிரவாதத்தின் மூலமாக மறைமுக போர் தொடுத்து வருகிறது.