கோவை பூங்காவில் காதலன் கண்முன் மாணவி பலாத்காரம்: போக்சோவில் 4 பேர் கைது

கோவை: கோவையில் கடந்த 26ம் தேதி 11ம் வகுப்பு மாணவி ஒருவர் அங்குள்ள பூங்காவில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு 6 பேர் வந்தனர். அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பூங்காவின் அருகே மறைவான இடத்தில் வைத்து தாக்கினர். காதலன் கண்முன் மாணவியிடம் சில்மிஷம் செய்தனர்.  இருவரும் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சினர். ஆனால், காமவெறி பிடித்த வாலிபர்களோ காதலன் கண்முன்னே மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனை 6 பேரில் ஒருவன் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். சுமார் 1 மணிநேரத்துக்குபின் இருவரையும் மிரட்டி அனுப்பி விட்டனர்.  பயந்துபோன அந்த மாணவி இரவில் காதலன் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மறுநாள் மாலை வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவங்களை அழுது கொண்டே தாயிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 6 பேர் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, கொலை மிரட்டல், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவின்கீழ் ராகுல்(21), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28), நாராயணமூர்த்தி(30) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: