கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி 8வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன்(49). இவரது மகள் ஸ்வேதா(16). அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிக்குள்ளாகி வந்த ஸ்வேதாவை பெற்றோர் அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, ஜெயபால் என்பவர் இடுப்பில் 2 ஊசி போட்டுள்ளார். ஆனால், ஸ்வேதாவுக்கு காய்ச்சல் குறையவில்லை. தொடர்ந்து ஜெயபால் ஊசி போட்ட இடத்தில் கருப்பாக கட்டி போல் இருந்துள்ளது. இதையடுத்து, அவரை கெங்கவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.