சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடிய விடிய மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் விடாது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் முகநூலில் விளக்கம் அளித்துள்ளார். அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் அதிகம் ஆகியுள்ளது.