ஈரோடு: ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நேற்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதன்பின், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களில் சிலரை மட்டும் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த கலெக்டர் கதிரவனை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பாவடியாக செயல்பட்ட அந்த இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட இடத்தை எடுத்து அங்கு கட்டிடம் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.