சென்னை: சைதாப்பேட்டை சாலையில் நடந்து சென்ற மலேசியா வாழ் தமிழர்களை, கத்தி முனையில் மிரட்டி 11 சவரன் செயின், ₹20 ஆயிரம் மற்றும் பாஸ்போர்ட்டை பறித்துச் சென்ற 3 ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (62). இவர், மலேசிய நாட்டில் குடியுறிமை பெற்று வசித்து வருகிறார். சிகிச்சைக்காக கடந்த 10 நாட்களுக்கு முன், சென்னை வந்தார். பின்னர், சைதாப்பேட்டையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி, தாம்பரத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இவரை காண அவரது மகன் கபிலன் (21) நற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்துள்ளார். மகன் கபிலனை அழைத்து கொண்டு லட்சுமணன் விமான நிலையத்தில் இருந்து கால்டாக்சி மூலம் சைதாப்பேட்டை நந்தனம் சிக்னல் அருகே நள்ளிரவு 1 மணிக்கு வந்து இறங்கினர்.