சுரண்டை: சுரண்டையில் கனமழைக்கு வீட்டை இழந்தவருக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சுரண்டை பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மனைவி இசக்கியம்மாள். இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்றுமுன்தினம் இரவு இவரது வீடு இடிந்து விழுந்தது. கணவரை இழந்த இசக்கியம்மாள், தனது 3 பெண் குழந்தைகளையும் திருமணம் செய்து கொடுத்து தனியாக வசித்து வந்தார். தற்போது வீட்டை இழந்து செய்வதறியாது தவித்த இவருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், ஸ்டவ், மண்ணெண்ணெய், பெட்ஷீட், பாய் மற்றும் பண உதவியை திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.